கஷ்டமில்லாமல் பணம் சம்பாதி - Positive Energy Story in Tamil

Positive Energy Story in Tamil
Positive Energy Story in Tamil

வணக்கம் நண்பா தூங்கும்போதும் பணம் சம்பாதிக்கும் ஒரு வழியை நீ கண்டறியப்பட்டால் வாழ்நாள் முழுவதும் நீ உழைத்துக் கொண்டே இருப்பாய். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் இருக்காது என்பது வாரன் பஃபெட் நமக்கு கூறிய மிக முக்கிய அறிவுரைகளில் ஒன்றாகும். ஒரு ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள வேறுபாடு எது தெரியுமா ஏழை எப்போதும் பணத்தையே பெரும் சொத்தாகக் காண்பான். 

ஆனால் பணக்காரனோ தனது நேரத்தையே பெரும் சொத்தாக பார்க்கின்றார்கள். அதன் காரணமாகவே அதிக பணம் ஈட்டும் வேலையை அது எத்தனை கடினமானதாக இருந்தாலும் ஏழைகள் அதன் பக்கம் முண்டியடித்துக் கொண்டு செல்கின்றார்கள். தங்களால் முடிந்தவரை அதில் கஷ்டப்படுகிறார்கள். 

அந்த வேளையில் தங்களது நேரத்தை வாரி இறைத்து பணம் சம்பாதிக்கின்றார்கள். ஆனால் இங்கு அவர்கள் உணராத ஒரு உண்மை யாதெனில் உங்கள் நேரத்தை பணத்திற்காக விற்பது பணம் சம்பாதிப்பதற்கான ஒரு சாதுரியமான வழி அல்ல. ஏனெனில் என்னதான் நீங்கள் இரவு பகலாக உழைத்தாலும் ஒரு நாள்வரும் 24 மணித்தியாலங்களில் கொண்டதே ஆனால் பணக்காரர்கள் இந்த உண்மையை அறிவார்கள். 

அவர்களும் தங்களது ஆரம்ப காலத்தில் தனது நேரத்தை பணத்திற்காக விற்று ஒரு நாளில் பல மணிநேரங்கள் கடினமாக உழைத்து சிறிது சிறிதாக பணத்தை சேர்த்து கொள்வார்கள். ஆனால் அவர்களிடம் போதிய பணம் சேர்ந்ததுமே அப்பணத்தை தேவையற்ற செலவுகள் வீண் அடிக்காது அதைத் தனக்கு மேலும் பணம் ஈட்டித்தரும் வழிகளில் முதலீடு செய்வார்கள்.

அந்த முதலீடுகள் அவர்கள் கடுமையாக உழைக்காமலேயே அவர்களுக்கு மேலும் அதிக பணத்தை சம்பாதித்துக் கொடுக்கும். அப் பணத்தை வைத்து அவர்கள் மேலும் பல முதலீடுகளை உருவாக்குவார்கள். அம் முதலீடுகள் அவர்களுக்கு இன்னும் அதிக பணத்தை சம்பாதித்துக் கொடுத்து அவர்களை கோடீஸ்வரர்களாக மாற்றுகின்றன. 

இங்கு செல்வந்தர்கள் தங்களது நேரத்தை பணம் சம்பாதிப்பதில் செலவிடுவதில்லை. மாறாக அப் பணத்தினை தனக்கு சம்பாதித்துத் தரும் முதலீடுகளை உருவாக்குவதிலயே அதை செலவிடுகின்றார்கள். இதுவே ஒரு ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள வேறுபாடாகும். நண்பா உன் வாழ்வில் நீ சுதந்திரமாக பணம் சம்பாதிக்க விரும்பினால் செல்வந்தர்களின் இந்த யுக்தியை நீயும் பின்பற்றவேண்டும். உன்னால் முடிந்தவரை விரைவாக நீ தூங்கும் போதும் உனக்கு பணம் சம்பாதித்துத் தரும் முதலீடுகளை உருவாக்கவேண்டும். 

அம் முதலீடு ஒரு வணிகமாகவோ சொத்தாகவோ அல்லது பங்குகளாகவோ அது எதுவாகவும் இருக்கலாம் ஆனால் அந்த முதலீட்டின் மூலம் உனது செல்வம் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். எனவே உனது அறிவை வளர்த்துக் கொள். பல புதிய முதலீட்டு வழிகளை கண்டறி நீ சேமித்த பணத்தை அதில் முதலீடு செய் நீ தூங்கும் போதும் அம் முதலீடுகள் உனக்காக உழைத்து உன்னை கோடீஸ்வரராக மாற்றிவிடும்.


நன்றி


No comments:

Post a Comment