உன்னால் என்றும் பணக்காரனாக முடியாது ! அது ஏன் தெரியுமா? ! - Self Confidence Story in Tamil

Positive Energy Story in Tamil
Positive Energy Story in Tamil


வணக்கம் நண்பா ஒரு ஏழை எப்போது செல்வந்தன் ஆகின்றான் என Elon Musk கிடம் கேட்கப்பட்ட போது அவன் எப்போது தன்னை ஒரு செல்வந்தனாக எண்ணிக் கொள்கின்றானோ அதற்குத் தேவையான படி தனது சிந்தனையை கலைக்க முயற்சிகளையும் மாற்றிக் கொள்கின்றானோ அப்போதே அவன் செல்வந்தன் ஆகின்றான் என்றார் Elon Musk. அதிகமாக ஆசைப்படாதே அளவோடு சம்பாதி என்பதே இங்கிருக்கும் சினிமாக்கள் நமக்கு கூறிய போதனைகள் ஆகும். ஆனால் அப் போதனைகளை கூறும் அந்த சினிமாக்காரர்கள் கோடியில் சம்பாதித்து ஆடம்பரம் ஆகவே வாழ்கின்றார்கள் என்பது வேறு விடயம். தன்னையொரு பணக்காரனாக என்னும் ஒரு மனிதனால் மட்டுமே தான் விரும்பும் பணத்தினை சம்பாதித்துக் கொள்ள முடியும். அவனால் மட்டுமே பணத்தை கடவுளாக பார்க்காமல் காகிதமாக பார்க்க முடியும். அக் காகிதத்தை டன் கணக்கில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்ல முடியும். நண்பா வாழ்வில் நீ எதை கேட்கின்றாய்யோ அதுவே உனக்கு கிடைக்கும். ஆனால் பல நேரங்களில் நாம் நமக்குத் தேவையானதை இப் பிரபஞ்சத்திடம் கேட்பதில்லை என்னதான் உன் மனதில் நான் ஒரு கோடீஸ்வரன் ஆக வேண்டும் மிகப் பெரும் வெற்றிகளை எல்லாம் அடைந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அந்த ஆசை நிச்சயம் ஒருநாள் நிறைவேறும் என்பதை உன் மனம் நம்ப மறுக்கிறது. நானே வாழ்வில் நிற்கதி திரிகின்றேன் உதவியற்ற தவிக்கின்றேன் என்னால் எப்படி கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என உன் மனம் கேள்வி கேட்கின்றது எதார்த்தமாக சிந்திக்கின்றேன் என்ற பெயரில் அது தன்னைத்தானே தாழ்த்திக் கொள்கின்றது. அப்படி உன் மனதில் ஒரு சிந்தனை எழும்போது ஒரு நிமிடம் அமைதியோடு இவ்வுலகில் வெற்றியடைந்த மனிதர்களைப் பார் அதில் முக்கால்வாசி க்கும் அதிகமானவர்கள் இன்று நீ இருக்கும் நிலையைவிட மோசமான நிலையில் இருந்தே தங்களது வாழ்க்கையை ஆரம்பித்தவர். அன்று அவ் வெற்றி அவர்களுக்கு சாத்தியமான போது இன்று அதை ஏன் உனக்கு சாத்தியமாகாது நிச்சயம் அது சாத்தியமாகும். ஆனால் அதை நம்புவதற்கு நீ தயாராக இல்லை. எனவே இப்போது கூறு வெற்றி என்பது எனக்கு எட்டாக் கனிதான் அதனால் நான் அதிகம் கஷ்டப்படாமல் இருப்பதை வைத்து வாழ்ந்து கொள்கின்றேன் என்ற மனதுடன் உன் ஆற்றல்களை எல்லாம் குழிதோண்டி புதைத்துவிட்டு ஏதோ கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும் ஒரு சாமானியனாக நீ வாழ போகிறாயா ? அல்லது ஒரு கோடீஸ்வரனின் தனித்துவம் மனநிலையுடனும் என்றாவது ஒரு நாள் நான் எண்ணிய வாழ்க்கை என்னை வந்தடையும் என்ற மன உறுதியுடனும் அதற்காக என்று உன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து ஒரு வெற்றியாளனாக மாறப்போகின்றாயோ முடிவு உன் கையில்.

No comments:

Post a Comment