அன்று பாக்கெட்டில் வரும் ஏழு டாலர்களுடன் நான் நடு வீதியில் நின்ற போது இன்று நான் வாழ்வில் தோல்வி அடைந்து என்னிடமிருந்த அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்கின்றேன். ஆனால் என்றாவது ஒருநாள் இவ்வீதி முழுவதும் ஒரு கோடீஸ்வரன் ஆக வலம் வருவேன். அதற்குக் குறுக்கே யார் வந்தாலும் அவர்களை ஓரம் கட்டிவிட்டு முன்னேறுவேன் என நான் என்னுள் எண்ணிக் கொண்டேன். நண்பா என்றும் வாய்ப்புகளுக்காக பிச்சை எடுப்பவன் ஆக நீ வாழாதே பிற மனிதர்களிடம் சென்று உன் முன்னேற்றத்திற்காக மன்ற ஆடாதே மாறாக வாழ்வில் உனக்கு எது வேண்டுமோ அதை நீயாகவே தைரியத்துடன் சம்பாதித்துக் கொள்ளும் உறுதி உன்னிடம் இருக்க வேண்டும். ஓர் வாய்ப்புக்கான கதவு மூடப்பட்டால் அதன் முன்னே ஏக்கத்துடனும் சோகத்துடனும் நின்று அக்கதவு திறக்கும் வரை காத்திருக்காதே. நிச்சயம் அது நடக்கப் போவதில்லை ஏனெனில் ஒரு வாய்ப்புக்கான கதவை மூட இங்கு பல நூறு மனிதர்கள் உள்ளார்கள். ஆனால் அக்கதவை உனக்காக நிச்சயம் எவருமே வரப்போவதில்லை. நண்பா உன் வாழ்வை எவரையும் நம்பி வாழாதே உன் வெற்றிக்காக எவர் முன்பும் கைகட்டி நிற்காது உனக்குத் தேவையானதை நீயே சம்பாதித்துக் கொள்ளும் சாமர்த்தியசாலியாக நீ மாற வேண்டும். என்றும் ஒன்றை மறந்து விடாதே உன் வெற்றியை இவ்வுலகில் உள்ள ஒரே ஒரு மனிதனால் மட்டுமே தடுத்துவிட முடியும் அம்மனிதன் நீயேதான். இன்று நீ போராட வேண்டியது உன்னுடன் தான் இன்று நீ வெல்ல வேண்டியது தாழ்வு மனப்பான்மையில் தத்தளிக்கும் உன்னைத்தான். எனவே அதிகமாக ஆசைப்படு உன் இலக்குகளை எப்போதும் உயர்ந்ததாகவே வை. நீ யாருக்கும் சளைத்தவன் அல்ல என்பதை நம்பு உன்னால் எதுவும் முடியும் என்பதை நம்பு அந்த நம்பிக்கை உன்னிடம் எத்தனை உறுதியாக உள்ளதோ அத்தனை விரைவாக நீ உன் கனவுகள் அனைத்தையும் அடைந்து கொள்வாய். எனவே இப்போது கூறு மூடப்பட்ட கதவின் முன்னால் நின்று அது எப்போது திறக்கும் ஏங்கி கொண்டிருப்பவனாக நீ வாழ போகிறாயா ? அல்லது உன் முன்னே இருப்பது எத்தனை உறுதியான கதவாக இருந்தாலும் அதை ஒரே உதையில் உடைத்தெறிந்து உன் கனவுகளை அடைபவன் ஆக நீ மாற போகிறாயா முடிவு உன் கையில்.
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.