ஹிட்லரிடம் கற்றுக்கொள் - Positive Energy Story in Tamil

ஹிட்லரிடம் கற்றுக்கொள் - Positive Energy Story in Tamil
Positive Energy Story in Tamil

வணக்கம் நண்பா ஹிட்லர் உலகையே நடுநடுங்க வைத்த ஒரு சர்வாதிகாரி. 75 மில்லியன் உயிர்களை காவுகொண்ட இரண்டாம் உலக யுத்தத்தை ஆரம்பித்தவர். தனது கொடூர இன வெறியால் பல மில்லியன் அப்பாவிகளை சித்திரவதை செய்து கொன்ற ஒரு அரக்கன். இவையே ஹிட்லர் குறித்து நாம் தெரிந்து வைத்திருக்கும் உண்மைகளாகும். ஆனால் இங்கு பலர் அறியாத நாம் பல பாடங்களை கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு உத்வேகம் மிக்க இறந்த காலமும் ஹிட்லருக்கு உண்டு. ஒரு வேளை உணவின்றி குடியிருக்க வீடு இன்றி வீதியில் வாழ்ந்து கொண்டிருந்த ஹிட்லர். ஐரோப்பாவின் அரைவாசியை ஆக்கிரமித்து பல வல்லரசு நாடுகளை அஞ்சி ஒதுங்கும் சர்வாதிகாரியாக மாறிய வரலாறு அது. அந்த வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்ளக் கூடிய மிக முக்கிய மூன்று பாடங்களையே நாம் இங்கு காணவிருக்கிறோம்.

முதலாவது இவ்வுலகில் சாத்தியமற்றது என்று எதுவுமே இல்லை. ஹிட்லர் என்ற அச்சிறுவன் சிறுவயதிலிருந்தே தந்தையால் அதிகம் துன்புறுத்த பட்டவன். பாடசாலையில் சக மாணவர்களால் அதிகம் சித்திரவதை செய்யப்பட்டவன். ஆனால் அச் சிறு வயதிலும் இத்தனை கஷ்டங்களுக்கு நடுவிலும் ஜெர்மனியர்கள் மட்டுமே உலகை ஆள வேண்டும் அதில் தனக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்ற தீராத கனவு அவனிடமிருந்தது. பிற்காலத்தில் அவனது தாய் தந்தை சகோதரன் என அனைவருமே இறந்துவிடவே வாழ்வில் எவ்வித உதவியும் அற்ற அந்த இளைஞன் தனது வயிற்றுப் பிழைப்புக்காக வேறு ஒரு ஊருக்கு வந்தான். அங்கும் வேலை கிடைக்காமல் உணவுக்கு பணமின்றி பல வருடங்கள் வீதியிலேயே உறங்கி அங்கு கிடைத்ததை உண்டு வாழ்ந்தான். ஆனால் அப்போதும் உலகை ஆள வேண்டும் என்ற அவனது கனவு நீங்கவில்லை. வாழ்வில் நீ என் நிலையில் இருந்தாலும் நீ காணும் எக் கனவும் சாத்தியமானதே. அதை சாத்தியமாக்கிய தீருவேன் என்ற வெறி உன்னிடம் இருந்தால். இதுவே ஹிட்லர் நமக்குத் தந்த முதல் பாடமாகும்.

இரண்டாவது அனைத்திலும் வாய்ப்புக்களை கண்டுகொள். ஹிட்லர் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த காலத்திலேயே முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. அதில் அடிமட்ட ராணுவ வீரனாக ஜெர்மன் படையில் இணைந்தார் ஹிட்லர். ஜெர்மனியின் வெற்றிக்காக போர்க்களத்தில் முன்னின்று உக்கிரமாக போராடினார். ஆனால் அப்போரில் ஜெர்மனி தோல்வியுற்று எதிரிகளிடம் சரணடைந்தது. எதிரிகளிடமிருந்து பல கடுமையான நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டது. அதன் விளைவாக ஒரு பெரும்தொகை பணத்தை அவர்கள் எதிரி நாடுகளுக்கு செலுத்த வேண்டியிருந்தது. தங்கள் ராணுவத்தின் அளவை சரளமாகக் குறைக்க வேண்டியிருந்தது. ஜெர்மனியின் இந்த சரணடைவு அங்கிருந்த மக்களுக்கு மிகப் பெரும் ஏமாற்றத்தையும் விரக்தியையும் கொடுத்தது. போரின் விளைவாக அங்கு மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியும் வேலையில்லாத் திண்டாட்டமும் உருவானது. இந்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் ஹிட்லர். ராணுவத்தில் இருந்து விலகி அரசுக்கு எதிரான ஒரு இயக்கத்தில் இணைந்து கொண்டார். சில காலங்களிலேயே தனது பேச்சுத் திறமையால் அங்கிருக்கும் அனைவரையும் கவர்ந்து அந்த இயக்கத்தின் தலைவர் ஆனார். அதன்பின் முதலாம் உலகப்போரின் தோல்வியால் ஏற்கனவே மக்கள் மனதில் இருந்த விரக்தியையும் கோபத்தையும் பயத்தை அதிகமாக தூண்டி அவர்களை தனது இயக்கத்தில் இணைத்துக்கொண்டார்.

அவ்வியக்கத்தை ஒரு கட்சியாக மாற்றி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். அத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தாலும் தன்னிடமிருந்த வாக்குப் பலத்தை எதிர்க்கட்சி இடம் காட்டி ஜெர்மனியின் சன்சிலர் பதவியை பெற்றுக் கொண்டார். அப்போது வரை அந்தப் பதவி எவ்வித அதிகாரமும் அற்ற ஓர் பதவி ஆகவே இருந்தது. ஆனால் அன்று ஜெர்மன் அரசை எதிர்த்து அதிகமான மக்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு இளைஞன் பாராளுமன்றத்திற்கு தீவைத்து விட்டான். இதையெல்லாம் காரணம் காட்டி எனக்கு அதிகாரம் தந்தால் நான் மக்களை கட்டு படுத்துவேன் எனக் கூறி கொஞ்சம் கொஞ்சமாக ஜனாதிபதியின் அதிகாரத்தை தன்னிடம் எடுத்துக் கொண்டார். தனது கட்சியின் கீழ் ஒரு ஆயுதப் படையை உருவாக்கினார். பின்னர் ஜெர்மனியின் ஜனாதிபதி இறந்துவிடவே அது முழுக்க முழுக்க ஹிட்லரின் கட்டுப்பாட்டினுள் வந்தது. அன்று ஹிட்லரின் முன்னேற்றத்திற்கு யாருமே உதவவில்லை. சொல்லப்போனால் ஹிட்லரின் வளர்ச்சியை தடுக்கவே பலர் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் ஓரம்கட்டிவிட்டு தனது திறமைகளையும் உழைப்பையும் கொண்டே முழு ஜெர்மனியையும் ஆக்கிரமித்துக் கொண்டான் அன்று வீடு இன்றி வீதியில் வாழ்ந்து கொண்டிருந்த அனாதை இளைஞன்.

மூன்றாவது என்றும் உன்னை தாழ்வாக எண்ணாதே முதலாம் உலகப்போரில் பொருளாதாரம் நலிவுற்று வேலையில்லாத் திண்டாட்டத்தில் வறுமையிலும் வாடிக் கொண்டிருந்த ஜெர்மனி சரியாக இருபது வருடங்களில் அதைவிட உக்கிரமான இரண்டாம் உலகப் போரை முன்னெடுத்து நடத்தும் எனக் கூறியிருந்தால் அன்று அதை எவருமே நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் நடந்தது அதுதான்.

நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று ஹிட்லரின் உறுதியான நம்பிக்கையை வறுமையின் கோரப்பிடியில் வாழ்ந்து கொண்டிருந்த ஜெர்மனியை வெறும் ஆறு வருடத்தில் தட்டி எழுப்பி மீண்டும் வல்லரசாகியது. ஹிட்லரிடமிருந்து அந்த மனநிலையை என்று அவரது படை வீரர்கள் இடமும் இருந்தது. அந்த நம்பிக்கையையும் அதன் மூலம் கிடைத்த உக்கிரத்தையும் கொண்டே அவர்கள் ஐரோப்பாவின் அரைவாசிக்கும் அதிகமான பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அன்று ஹிட்லருக்கு என்ற பெயரைக் கேட்டாலே அமெரிக்கா இங்கிலாந்து போன்ற வல்லரசுகள் நடுநடுங்கிக்கொண்டிருந்தன. இதற்கெல்லாம் ஒரே காரணம் நான் எவரையும் விடத் தாழ்ந்தவன் இல்லை என்று அவரது திடமான நம்பிக்கை மட்டுமே.

உன் நிலை எதுவாக இருந்தாலும் என்றும் தன்னம்பிக்கையை இழந்து விடாதே. உன்னை தாழ்வானவனாகவும் பலவீனமானவனாக எண்ணாதே ஏனெனில் உன் நம்பிக்கையின் வழிபாடாகவே நீ இருப்பாய் என்பது ஹிட்லர் நமக்கு தந்த மூன்றாவது பாடம் ஆகும்


நன்றி


No comments:

Post a Comment