கருப்பு பூஞ்சை Black Fungus - Mucormycosis என்பது என்ன ?

கருப்பு பூஞ்சை Black Fungus - Mucormycosis என்பது என்ன ?

Black Fungus - Mucormycosis
Black Fungus 

மேலும் படிக்க : 



சனிக்கிழமை காலை மும்பையைச் சேர்ந்த கண் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அக்ஷய் நாயர் மூன்று வாரங்களுக்கு முன்பு covid-19 தொடரில் இருந்து மீண்ட 25 வயது பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய காத்திருந்தார். அறுவை சிகிச்சை அறையினுள்ளே காது மூக்கு மற்றும் தொண்டை நிபுணர் ஒருவர் ஏற்கனவே அந்த சர்க்கரை நோய் பாதிப்பு உள்ள நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அவர் அந்த நோயாளியின் மூக்கில் ஒரு குழாயை விட்டு அரிதான ஆனால் ஆபத்தான black fungus நோய்தொற்று ஆன Mucormycosis  நோயால் நோய்தொற்று பாதிக்கப்பட்ட திசுக்களை அகற்றி கொண்டிருந்தார். இந்த தீவிரமான தொற்று மூக்கு கண் சில நேரங்களில் மூளையை கூடப் பாதிக்கிறது. அவரின் சிகிச்சை முடிந்ததும் நோயாளியின் கண்ணை அகற்ற டாக்டர் நாயர் மூன்று மணிநேர நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். அவருடைய உயிரை காப்பாற்ற நான் அவளுடைய கண்ணை அகற்ற வேண்டும் அதுதான் இந்த நோயின் தன்மை என டாக்டர் நாயர் பிபிசியிடம் கூறினார்.covid-19 கூடிய இரண்டாவது அலை இந்தியாவைத் தாக்கி வருகிறது. இந்த நிலையில் covid-19 நோயிலிருந்து மீண்ட மீண்டு கொண்டிருக்கும் நோயாளிகளை கருப்பு புஞ்சை என்று அழைக்கப்படும் ஒரு அதிக நோய் தொற்று பாதிப்பதாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் இப்போது தெரிவிக்கின்றனர். Mucormycosis என்பது என்ன Mucormycosis என்பது மிகவும் அரிதான தொற்று மண், தாவரங்கள், உரம், மற்றும் அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொதுவாக காணப்படும் பூஞ்சையால் இது உருவாகிறது. இது எல்லா இடங்களிலும் இருக்கிறது மண்ணிலும் காற்றிலும் மற்ற ஆரோக்கியமான மக்களின் மூக்கு மற்றும் சளியில் கூட காணப்படுகிறது என்கிறார் டாக்டர் நாயர். இது சைனஸ்கள் மூளை மற்றும் நுரையீரலைப் பாதிக்கிறது. மேலும் சர்க்கரை நோய் புற்றுநோய் எச்ஐவி எய்ட்ஸ் போன்ற கடுமையான நோய் எதிர்ப்பு குறைவால் உள்ள நபர்களுக்கு உயிருக்கே கூட ஆபத்தை விளைவிக்கக் கூடியது. 50% இறப்பு வீதத்தைக் கொண்ட இந்த பூஞ்சை தீவிர covid-19 நோயாளிகளிடம் அவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சையான ஸ்டீராய்டுகள் இன் பயன்பாடு உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஸ்டீராய்டுகள் covid-19 நோயாளிகளின் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதிக அளவில் செயல்படும் போது ஏற்படக்கூடிய சில சேதங்களைத் தடுக்க உதவுகிறது. ஆனால் அவை நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து டயபடிஸ் நோயாளிகள் மற்றும் டயபடிஸ் அல்லாத covid-19 நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியின் வீழ்ச்சியே Mucormycosis என்ற நிலைக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. டயபடிஸ் பிரச்சினை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. கொரோனா வைரஸை அதிகரிக்கிறது மேலும் covid-19 உடன் போராட உதவும் ஸ்டீராய்டுகள் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் விதமாக செயல்படுகின்றன என இதுகுறித்து டாக்டர் நாயர் விரிவாக விளக்குகிறார். கொரோனா   இரண்டாவது அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் ஒன்றான மும்பையில் மூன்று வெவ்வேறு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர் நாயர் ஏப்ரல் மாதத்தில் பூஞ்சை தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 40 நோயாளிகளை தான் ஏற்கனவே எதிர்கொண்டு உள்ளதாகவும் அவர்களில் பலர் டயபடிஸ் நோயாளிகளாக இருந்ததாகவும் அவர்கள் வீட்டில் இருந்தே covid-19 நோய்க்கு சிகிச்சை எடுத்து மீண்டவர்கள் என்றும் கூறுகிறார். அவர்களில் 11 பேருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஒரு கண் அகற்றப்பட வேண்டி இருந்தது. டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் இடையில் மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி மற்றும் புனே ஆகிய ஐந்து நகரங்களில் உள்ள அவருடன் பணிபுரியும் ஆறு மருத்துவர்கள் இத்தகைய தோற்று 58 பேருக்கு பதிவாகி உள்ளதாக கூறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் Covid -19 இருந்து மீண்ட 12 முதல் 15 நாட்களுக்குள் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மும்பையில் பரபரப்பாகச் செயல்படும் சீயோன் மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களில் 24 பூஞ்சை தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டன. முன்னர் இது ஓர் ஆண்டுக்கு ஆறு என்ற அளவில்தான் இருந்தது என மருத்துவமனையில் காது மூக்கு மற்றும் தொண்டை பிரிவின் தலைவர் டாக்டர் ரேணுகா பிராடு தெரிவித்துள்ளார். அவர்களில் 11 பேர் இதனால் ஒரு கண்ணை இறந்ததாகவும் 6 பேர் உயிரிழந்ததாகவும் அவர் கூறுகிறார். அவரது நோயாளிகளில் பெரும்பாலானோர் நடுத்தர வயது சர்க்கரை நோயாளிகள் அவர்கள் Covid -19 இருந்து மீண்டு இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்ட இப்போது இது வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று பேரை பாதிப்பதை நாங்கள் காண்கிறோம் பிற்காலத்தில் இது மேலும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என அவர் கவலை தெரிவிக்கிறார். தென்னிந்திய நகரமான பெங்களூரில் கண் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரகு ராஜ் ஹெக்டே இது போன்ற ஒரு நிகழ்வை கூறுகிறார். கடந்த இரண்டு வாரங்களில் அவர் 19 பேருக்கு இந்த Mucormycosis நோய் பாதித்த கண்டதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் இளம் நோயாளிகள் என்றும் சிலரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அறுவை சிகிச்சை கூட செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார். கடந்த முதல் அலையின்  போது ஏற்பட்டதை காட்டிலும் தற்போது ஏற்படும் பூஞ்சை தொற்று வீரியம் நிறைந்ததாகவும் எண்ணிக்கையில் அதிகம் இருப்பதையும் கண்டு வியப்படைந்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மும்பையில் பத்துக்கும் குறைவானவர்களே பதிவான நிலையில் இந்த ஆண்டு நிலைமையே வேறு என்கிறார் டாக்டர் நாயர். பெங்களூரு டாக்டர் ஹெக்டே ஒரு தசாப்தமாக ஆண்டுக்கு ஓர் இரண்டுக்கு மேல் இந்த தொடர் பதிவாக வில்லை என கூறுகிறார். பூஞ்சை தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொதுவாக மூக்கடைப்பு மற்றும் மூக்கில் ரத்தம் வடிதல் வீக்கம் கண் வலி கண் இமை இறக்கம் போன்ற அறிகுறிகளுடன் தொடங்கி பார்வை மங்குதல் முதல் பார்வை இழப்பு ஏற்படுகிறது. மூக்கைச் சுற்றி தோளில் கருப்பு திட்டுகள் தோன்றலாம் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளில் பெரும்பாலானோர் பார்வை இழப்பு ஏற்படும் துவங்கிவிட்ட கட்டத்தில்தான் சிகிச்சைக்கு வருவதாகவும் அந்த தொற்றுநோய் பரவாமல் தடுக்க கண்களை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள். சில சந்தர்ப்பங்களில் நோயாளிகள்  இரு கண்களிலும் பார்வை இழந்து விடுவதாகவும் சில அரிய சந்தர்ப்பங்களில் நோய் பரவாமல் தடுக்க மருத்துவர்கள் தாடை எலும்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வீடு இருப்பதாகவும் இந்திய மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நோய்க்கு எதிராக செயல்படக் கூடிய ஒரே மருந்து ஒரு டோஸ் Rs.3500 இது தினமும் எட்டு வாரங்களுக்கு அன்றாடம் நரம்பில் செலுத்த வேண்டும் இது ஒன்றுதான் பூஜை பிரச்சினைக்காக பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும் ஒரே மருந்து என்கிறார்கள் மருத்துவர்கள். Covid -19  நோயாளிகளுக்கு சிகிச்சையின் போதும் சிகிச்சைக்குப் பிறகும் சரியான அளவிலான ஸ்டீராய்டுகள் சரியான காலத்திற்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதே பூஞ்சை தொற்று நோயை தடுப்பதற்கான ஒரு வழியாகும் என மும்பையைச் சேர்ந்த சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் ராகுல் பாக்ஸி கூறுகிறார். கடந்த ஆண்டில் covid-19 பாதிக்கப்பட்ட சுமார் 800 சர்க்கரை நோயாளிகளுக்கு தான் சிகிச்சை அளித்ததாகவும் அவர்களில் எவருக்கும் பூஞ்சை தொற்று ஏற்பட வில்லை என்றும் அவர் கூறுகிறார். நோயாளிகள் குணமாகி வீடு திரும்பிய பிறகும் மருத்துவர்கள் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும் டாக்டர் பாக்ஸி கூறுகிறார். இது மிகப்பெரிய அளவில் பரவவில்லை என்றாலும் இது தொடர்ந்து நாடு முழுவதும் அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன கூற முடியவில்லை என ஒரு மூத்த அரசு அதிகாரி தெரிவிக்கிறார். இது திரிவு வைரஸ் ஆக தோன்றுகிறது ரத்த சர்க்கரை அளவை மிகவும் அதிகரிக்கிறது மேலும் இதில் குறிப்பாக இளவயது அவர்கள் தான் அதிகம் பாதிக்கிறது என்கிறார் டாக்டர் ஹெக்டே. அவர் இதுவரை பார்த்ததில் மிகவும் இளம் வயது நோயாளி ஒரு 27 வயது இளைஞர் கடந்த மாதம் சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் சர்க்கரை நோயாளி கூட இல்லை covid-19 தொற்று ஏற்பட்டால் இரண்டாவது வாரத்தில் நாங்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது கண்ணை அகற்ற வேண்டியிருந்தது இது மிகவும் கொடுமையானது என அவர் கூறுகிறார்.


முடிந்தவரை பகிரவும்



நன்றி


No comments:

Post a Comment