தன்னம்பிக்கை கவிதைகள் | Thannambikkai Quotes in Tamil

தன்னம்பிக்கை கவிதைகள் | Thannambikkai Quotes in Tamil
Thannambikkai Quotes in Tamil


  • எல்லா உயிரினமும் இந்த பூமியில் வாழத்தான் பிறக்கிறது.


  • சில உயிரினம் தின்று பிழைக்கும்.


  • சில உயிரினம் கொன்று பிழைக்கும்.


  • வாழ்வென்பதற்கு ஆயிரம் பக்கம் விளக்கங்கள் தரலாம்,


  • எளிமையான விளக்கம் வாழ்வென்பது...


  • தப்பிப்பிழைப்பது, கொன்றுப்பிழைப்பது.


  • இதில் உனக்கான நீதியை நீயே உருவாக்கு.


  • வலி தான் வழி, வேறு வழியில்லை.


  • நிழல் உலகத்தில் நிஜங்களை தேடி அலையாதே!


  • நிழலுக்கென்று தனி உருவம் கிடையாது.


  • காணும் காட்சியும் மாறும்,


  • மனிதர்களின் மனசாட்சியும் மாறும்!


  • இரண்டையும் மாற்ற முடியாது!


  • "விழித்துக்கொண்டே உறங்கு"


  • அளவற்ற உறக்கத்தையும், இரக்கத்தையும் தூக்கில் ஏற்று.


  • இலட்சியத்தில் அலட்சியம் வேண்டாம்.


  • அவரவர் நிலைக்கு அவரவரே காரணம்.


  • இவைகளை நீ புரிந்துகொண்டால்...


  • யாரையும் பாவமும் பார்க்கமாட்டாய்,


  • பழியும் தீர்க்க மாட்டாய்!




No comments:

Post a Comment